செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 14,557 ஆக உயர்வு..

360 more people in chengalpattu dist. confirmed corona positive.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 360 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று மாலை வரை 2.40 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 3,838 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. சென்னையில் மொத்தம் 98,767 பேருக்கு கொரோனா தொற்று பாதித்த நிலையில், 2092 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 14,197 பேருக்கு கொரோனா பாதித்திருந்தது. இந்த மாவட்டத்தில் இன்று மேலும் 360 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 14,557 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10,480 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 3,471 பேர் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் நேற்று மாலை வரை 246 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக பாதிப்பு உள்ளது. இந்த மாவட்டத்தில் 13,481 பேருக்குத் தொற்று பாதித்த நிலையில், 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

You'r reading செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 14,557 ஆக உயர்வு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெயலலிதா பெயரில் மெட்ரோ ரயில் நிலையம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்