தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது...

corona cases nearing 3 lakhs in tamilnadu.

தமிழகத்தில் இது வரை 2 லட்சத்து 90,907 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 2.32 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 4808 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.8) ஒரே நாளில் 5883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 17 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 2 லட்சத்து 90,907 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5043 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 32,618 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 53,487 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 118 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 4808 ஆக உயர்ந்தது. சென்னையில் நேற்று 986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 8124 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 425 பேருக்கும், காஞ்சிபுரம் 254, மதுரை 91, திருவள்ளூர் மாவட்டத்தில் 391 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 17,411 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 16,612 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11,898 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 246 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 245 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. திருவண்ணாமலை, கன்னியாகுமரி, கோவை, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.

You'r reading தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சொகுசு போதும் ஒரு நோயாளியின் செலவையாவது ஏற்க பாருங்கள்.. பிரபல நடிகர்களுக்கு சோனு சூட் அழைப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்