மாணவர்களுக்கான துணைத்தேர்வு... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு...! துணைத்தேர்விற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Publication of guidelines for sub-selection

கொரோனா தொற்றின் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு , பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி துணை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் அதற்கான நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 26 வரை தொடர்ச்சியாக நடைபெறும்.

பிளஸ் 1 துணைத் தேர்வு செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 7 வரை நடைபெறும்.

பிளஸ் 2 துணைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 28 வரை நடைபெறும்.

இதுகுறித்த அரசாணையைத் தலைமை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ளார் அதில் தேர்வு வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன அதன்படி அறையின் அளவு 400 சதுர அடிக்குக் குறைவாக இருந்தால் 10 மாணவர்களும் , 400 சதுர அடிக்கு மேல் இருந்தால் 20 மாணவர்களும் சமூக இடைவெளியைப் பின்பற்றித் தேர்வு எழுதலாம்.

You'r reading மாணவர்களுக்கான துணைத்தேர்வு... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு...! துணைத்தேர்விற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தோழர் மியா கலிஃபா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்