குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கமல் நேரில் ஆறுதல்

குரங்கணி காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல் ஆறுதல் கூறினார்.

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் டிரெக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கினர். இதி, இதுவரை 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமீபத்தில் உயிரிழந்த சென்னையை சேர்ந்த அனுவித்யா மற்றும் நிஷா ஆகியோரின் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் கமல்ஹாசன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கமல், “எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கமல் நேரில் ஆறுதல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தென்னிந்திய ஸ்பெஷல் வடகறி ரெசிபி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்