தமிழக அரசு வெளியிட்டுள்ள பெண்களுக்கான வேலைவாய்ப்பு !

Employment for women published by the Government of Tamil Nadu!

சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சென்னை மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்டு விண்ணப்பிக்கும் மையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரச் சுற்றளவுக்குள் வசிப்பவராக இருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் மையத்தின் பெயர் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி, இருப்பிடம், சாதி, விதவை / கணவரால் கைவிடப்பட்டவர் போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்தும், ரூ.25/-க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசத்தை தெளிவாக எழுதிய அஞ்சல் உறையுடனும் பதிவஞ்சலில் "ஆணையர், சமூக நலம் (ம) சத்துணவு திட்டதுறை, 2வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 600 015"என்ற முகவரிக்கு 25.09.2020 மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். நிர்ணியிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தகுதியற்ற விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்விற்கு அழைப்பு கடிதம் அனுப்படமாட்டாது.

You'r reading தமிழக அரசு வெளியிட்டுள்ள பெண்களுக்கான வேலைவாய்ப்பு ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ்நாடு மின்சாரவாரிய குடும்ப ஓய்வூதிய பாதுகாப்பு நலநிதி திட்டம் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்