குமரபாளையத்தில் பயங்கரம் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

one electrician died in electricity

குமரபாளையம் அருகே, மின்கம்பத்தில் பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம்,குமரபாலயத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.இவர் மின்சார துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன் தினம் குமரிப்பாளையத்தில் மழை பெய்ததால் மின் கம்பிகள் யாவும் சாலைகளில் அறுந்து தொங்கியது.இதனால் மக்கள் மின்சார வாரியத்துக்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளனர்.இதனால் விரைந்து வந்த ஆறுமுகம் மின் கம்பியை பழுது பார்க்க மின்சார கம்பியில் ஏறினார்.இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஆறுமுகத்தின் மேல் மின்சாரம் பாய்ந்து கம்பியில் பிணமாக தொங்கினார்.இதனை கண்ட சுற்று புற மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் ஆறுமுகத்தின் உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதையும் படிங்க: கோபத்தால் நடந்த விபரீதம்!!மகாரஷ்ராவில், தாய் தனது மகளை கல்லால் தாக்கி கொலை செய்த காட்சி


You'r reading குமரபாளையத்தில் பயங்கரம் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கோபத்தால் நடந்த விபரீதம்!!மகாரஷ்ராவில், தாய் தனது மகளை கல்லால் தாக்கி கொலை செய்த காட்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்