ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. மருத்துவர்கள் சாதனை..

4 child born in one delivery

தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அம்பாசமுத்திர பகுதியில் வசித்து வருகிறார் இலக்கியம்மாள் (20). இவரது கணவர் சுரேஷ் (26) வீட்டிற்கு சாயம் அடிக்கும் வேலையை செய்து வருகிறார். இலக்கியம்மாள் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு கடந்த 7 ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு பிரசவத்தில் 2 ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தை என மொத்தம் 4 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறகு நான்கு குழந்தை என்பதால் தாயையும், குழந்தையையும் மிகவும் போராடி காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

குழந்தைகளின் எடை மிகவும் குறைவாக உள்ளதால் குழந்தைகளை தனி அறையில் வைத்து தீவிரமாக சிகிச்சை அளித்து வருவதாக பிரசவம் பார்த்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் குழந்தைக்கும் தாயுக்கும் எந்த வித ஆபத்தும் இல்லை நலமுடன் இருக்கிறார்கள் என்று தெரிவித்து இருந்தனர். வெற்றிகரமாக நான்கு குழந்தையை காப்பாற்றியதால் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதே போல் தான் கொரோனா தொற்று இருந்த 23 வயது பெண்ணுக்கும் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தது. அதுவும் மூன்றும் ஆண் குழந்தைகளாக பிறந்தது. இது போல் ஆச்சரிய சம்பவம் நாளுக்கு நாள் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

You'r reading ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்.. மருத்துவர்கள் சாதனை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண், தோட்டக்கலை இளங்கலை, பட்ட மற்றும் பட்டய படிப்பிற்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்