உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் ரத்து...!

புயல் காரணமாக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைத்துள்ளார்.

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தைக் கடந்த 20ஆம் தேதி முதல் திருக்குவளையில் இருந்து துவக்கினார்.தினமும் கைது, பின்னர் விடுதலை, பிரச்சாரம் என்று மாறி மாறி உழன்று வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது புயல் எச்சரிக்கை காரணமாகத் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். எனினும் புயலுக்குப் பிறகு வரும் 28ஆம் தேதி முதல் மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

புயல் எச்சரிக்கை காரணமாகக் கடலூர் தஞ்சை விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது புயல் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் வெளியில் வரக்கூடாது என்று அரசு பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்த சூழ்நிலையில் பிரச்சாரம் செய்வது உசிதமானது அல்ல என்று கருதிய உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை ஒத்திவைத்துள்ளார்.

You'r reading உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் ரத்து...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேலும் 43 சீன செயலிகளுக்கு இந்தியா தடை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்