சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் சூழ்ந்தது வெள்ளம்

பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சிதம்பரத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகச் சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் 4 அடி அளவுக்குத் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை குளத்தில் தண்ணீர் வெளியேறும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்குக் கோவில் தீட்சிதர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதைத் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் அஜீதா பர்வீன் தலைமையில் அதிகாரிகள் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள கால்வாய் அடைப்பைச் சரி செய்து வருகின்றனர். கால்வாய்க்குள் இரண்டு மோட்டார் பொருத்தி தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

You'r reading சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் சூழ்ந்தது வெள்ளம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அர்ஜுனமூர்த்தி எனது தந்தைக்கு ஆலோசகராக இருந்ததில்லை.. தயாநிதி மாறன் மறுப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்