வெள்ள பகுதி மக்களை சந்திக்க வந்த பிரேமலதா விஜயகாந்த்திற்கு அனுமதி மறுப்பு

சீர்காழியில் தே.மு.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தை மக்களைப் பார்க்க அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ,கொள்ளிடம் சுற்றுவட்டாரத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் வீடுகள், விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்வையிடவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சீர்காழிக்கு வந்தார்.

சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்வையிட வந்தவரை உள்ளே அனுமதிக்காமல் போலீசார் தடுத்துத் திருப்பி அனுப்பினர்.முதல்வர் இந்தப் பகுதிக்கு வர இருப்பதால் உங்களை அனுமதிக்க முடியாது என்று போலீசார் தடுத்து நிறுத்தி பிரேமலதாவைத் திருப்பி அனுப்பினர்.

You'r reading வெள்ள பகுதி மக்களை சந்திக்க வந்த பிரேமலதா விஜயகாந்த்திற்கு அனுமதி மறுப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபுதேவாவும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளலாம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பிரேக் டான்ஸ் சேர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்