கடும் குளிர் காரணமாக முட்டை விலை உயர்வு...

கடும் குளிர் காரணமாக நாடு முழுவதும் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது

வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் 4 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 4 ரூபாய் 40 காசாக உயர்ந்துள்ளது நாமக்கல் வட்டாரத்திலிருந்து தினமும் 50 லட்சம் முட்டைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. கடும் குளிர் நிலவுவதும் முட்டை விற்பனை அதிகரித்து விலை உயர்வுக்குக் காரணம் என்கின்றனர் கோழிப் பண்ணையாளர்கள்.

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் கேரள மாநிலத்திற்கும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்குப் போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது .

You'r reading கடும் குளிர் காரணமாக முட்டை விலை உயர்வு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நர்ஸ் பணி ஏற்ற நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. பக்கவாத பாதிப்பில் மருத்துவமனையில் அனுமதி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்