சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் வலுவடைந்து வருகிறது. போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், கட்சியினர் சிலர் ஐபிஎல் போட்டி நடத்த விடக்கூடாது என்று குரல்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, சில திரையுலக பிரபலங்களும் இது போட்டி நடத்துவதற்கான உகந்த சூழல் இல்லை. இதனால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டங்கள் நடக்க அதிகளவில் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஆட்டம் நாளை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக, டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று மாலைல சென்னை வந்தனர். இவர்கள், ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு, ஓட்டல் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்காக அமெரிக்காவின் மினசோட்டாவில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழர்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்