டாஸ்மாக் கடையில் ஓசி சரக்கு கேட்டு தகராறு : ஆசிரியர் அரெஸ்ட்

திருவிடைமருதூர் அருகே டாஸ்மாக் கடையில் ஓசி மதுபானம் தராத கடை ஊழியரைத் தாக்கிய ஆசிரியர் பாண்டியன் கைது செய்யப்பட்டார்

திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறையில் டாஸ்மாக் கடை ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் கடையை அடைக்கும் பணியில் அங்குள்ள ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அங்கு வந்த கஞ்சனூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் கடை ஊழியரான ஜீவன் என்பவரிடம் ஓசியில் மதுபாட்டில் தரக்கோரி தகராறு செய்துள்ளார்.மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து டாஸ்மார்க் ஊழியர் ஜீவன் கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் பாண்டியனைக் கைது செய்தனர் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் அன்புள்ள ஒரு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் என்பது தெரியவந்தது.இதைக் கேட்ட போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே இப்படி ஓசை கேட்டு தகராறு செய்திருக்கிறார் என்று வேற நீங்கள் தான் அவரை சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

You'r reading டாஸ்மாக் கடையில் ஓசி சரக்கு கேட்டு தகராறு : ஆசிரியர் அரெஸ்ட் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியா முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் ரோகித் சர்மா 166 ரன்களில் அவுட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்