இரட்டை அகல ரயில் பாதை பணிகள் : பல ரயில்கள் மாற்றம்

இரட்டை அகல ரயில் பாதை பணிகள் காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையுடன் ரத்து, குருவாவார் எக்ஸ்பிரஸ் தென்காசி வழியாக இயக்கபோகும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இரட்டை அகல ரயில் பாதை பணிகள் காரணமாக வரும் நாட்களில் கீழ்காணும் ரயில்கள் முழுவதுமாக / பகுதி ரத்து மற்றும் பாதை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முழுவதுமாக ரத்து:

02627/8 திருச்சிராப்பள்ளி- திருவனந்தபுரம்- திருச்சிராப்பள்ளி விரைவு வண்டி 19.02.2021 முதல் 28.02.2021 வரை முழுவதுமாக ரத்து

06127 சென்னை எழும்பூர்- குருவாயூர் விரைவு வண்டி மதுரையில் இருந்து தென்காசி வழியாக திருநெல்வேலி, நாகர்கோவில் செல்லும்.*

24.02.2021, 25.02.2021, 26.02.2021 மற்றும் 28.02.2021 ஆகிய நாட்களில் மாற்று பாதையில் செல்லும்.

இதனால் சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிறுத்தங்கள் வழியாக செல்லாது.

02631/2 சென்னை எழும்பூர்- திருநெல்வேலி- சென்னை எழும்பூர் விரைவு வண்டி 24.02.2021 முதல் 28.02.2021 வரை மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

06321/2 நாகர்கோவில்- கோயம்புத்தூர்- நாகர்கோவில் விரைவு வண்டி 24.02.2021 முதல் 28.02.2021 வரை மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

07235/6 நாகர்கோவில்- பெங்களூரு- நாகர்கோவில் விரைவு வண்டி 24.02.2021 முதல் 28.02.2021 வரை விருதுநகர் வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

02667/8 நாகர்கோவில்- கோயம்புத்தூர்- நாகர்கோவில் விரைவு வண்டி 25.02.2021 முதல் 28.02.2021 வரை மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

06235/6 தூத்துக்குடி- பெங்களூரு- தூத்துக்குடி விரைவு வண்டி 28.02.2021அன்று ஒருநாள் மட்டும் மதுரை வரை மட்டுமே செல்லும்/ புறப்படும்.

06071 மும்பை தாதர்- திருநெல்வேலி விரைவு வண்டி 28.02.2021அன்று ஒருநாள் மட்டும் விருதுநகர் வரை மட்டுமே செல்லும்.

You'r reading இரட்டை அகல ரயில் பாதை பணிகள் : பல ரயில்கள் மாற்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சசிகலா: சாதிப்பாரா? சறுக்கு வாரா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்