சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு ஆலையில் விபத்து 5 பேர் பலி

சிவகாசி அருகே இன்று பிற்பகல் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாயினர். 13 பேர் படுகாயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் தங்ராஜ் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி உடல் உயிரிழந்தனர் மேலும் 13 பேர் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காளையார் குறிச்சியில் தங்கராஜ் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இதில் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 13 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.

கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியும் உடல் கருகிய 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மேலும் 13 பேர் படுகாயங்களுடன் சிவகாசி மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் சிவகாசி திருத்தங்கல் விருதுநகர் சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து எம் புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

You'r reading சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு ஆலையில் விபத்து 5 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இங்கிலாந்து 80 ரன்களில் ஆல்-அவுட் இந்தியாவுக்கு 49 ரன்கள் இலக்கு 2வது நாளிலேயே போட்டி முடிவுக்கு வருகிறது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்