சுல்தான் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா.. இஸ்லாமியர்கள் உற்சாகம்!

மதுரை மலை மேல் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் ஆவுலியான் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் அவுலியா தர்கா சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இன்று அதிகாலை 4 மணிக்கு வண்ணங்களால் அலங்கரித்த சந்தனகும்பம் வாகனத்தில் வைத்து மேளதாளங்களுடன் மலைமேல் கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து சுல்தான் சிக்கந்தருக்கு சந்தனம் பூசப்பட்டு சிறப்பு தூவா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சந்தனத்தை பெற்று சென்றனர்.

You'r reading சுல்தான் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா.. இஸ்லாமியர்கள் உற்சாகம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேமுதிக இல்லையேல் அதிமுகவே இன்று இருந்திருக்காது : சுதீஷ் பேச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்