அதிமுக, பாஜக கூட்டணி நிச்சயம் மண்ணை கவ்வும் : விஜயபிரபாகரன் ஆவேசம்

பண்ருட்டியில் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது இதில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது: அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பண்ருட்டிபலாவைவிட இனிப்பான செய்தியாகும் நம் தயவில்தான் அதிமுக இதுவரை ஆட்சியில் இருந்தது. இதுநாள் வரை நம் கைகள்கட்டப்பட்டு இருந்தது இனிசுதந்திர பறவையாக பறக்கலாம். நம்மை ஏமாற்றியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். 234 தொகுதியிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது. இனி அதிமுக எதிர்கட்சியாக கூட வரக் கூடாது. அதிமுக, பாஜக கூட்டணி நிச்சயம் மண்ணை கவ்வும். 234 தொகுதியிலும் கேப்டன்தான் வேட்பாளர் இனிமேல் தான் பட்டைய கிளப்பபோறோம். நிறைபேர் நம் முதுகுல குத்தி இருக்காங்க நாம் திருப்பி குத்தனும்..

கேப்டனும், மீண்டும் விருத்தாசலம் அல்லது பண்ருட்டியில் நிற்கனும். அதிமுகவை தோற்கடிக்கனும். தேமுதிக தயவில்தான் அதிமுக ஆட்சியிலேயே இருந்தது. நம்மை ஏமாற்றினார்கள் தக்க பதிலடி கொடுப்போம். எதிர்கட்சியாக கூட அதிமுக உட்கார கூடாது. யார் எல்லாம் நம்மை ஏளனமாக பார்த்தார்களோ அவர்களுக்கு நமது வலிமையை காட்டனும் அதிமுகவிற்கு இனி இறங்கு முகம் தான். தே மு தி மு க அதிமுகவிற்கு ஒருபடி மேல தான் இருக்கும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் மண்ணை கவ்வுவார். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியிருப்பது நல்ல விஷயம். கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் இருந்ததே தேமுதிகவின் தயவில் தான். இனிமேல் மக்களுடன் மட்டுமே கூட்டணி தேமுதிக வெற்றிக்காக அனைவரும் கூட்டாக உழைக்க வேண்டும் என்று விஜய பிரபாகரன் பேசினார்

You'r reading அதிமுக, பாஜக கூட்டணி நிச்சயம் மண்ணை கவ்வும் : விஜயபிரபாகரன் ஆவேசம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அனைத்து தொகுதியிலும் அதிமுக டெபாசிட் காலி.. தேமுதிக திடீர் சாபம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்