மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. புனேவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை அறிவிப்பு..

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புனேயில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மத்திய,மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கொரோனா ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணை முதல்வர் அஜித்பவார் கலந்து கொண்டார். அப்போது புனேவில் ஏப்ரல் 30 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.

You'r reading மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. புனேவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்.. ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு தொற்று!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்