`எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்கப் போறேன்.. நெட்டிசனை நெகிழவைத்த விஜய் வசந்த்!

கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்த் அவர்களின் மகன் விஜய் வசந்த் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதற்கிடையே, டுவிட்டரில் பயனர் ஒருவர், விஜய் வசந்தை குறிப்பிட்டு ``அடுத்த எலக்சன்லயும் வின் பண்ணனும் நினைச்சிங்கனா தொகுதி பக்கம் அப்பப்ப தலைய காட்டுங்க ப்ரோ" என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் கொடுத்த விஜய் வசந்த், ``அப்பப்ப இல்ல ப்ரோ எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்கப் போறேன். இது அடுத்த எலக்சன்ல வெற்றி பெறுவதற்காக அல்ல. இந்த எலக்சன்ல நீங்க என் மேல் வைத்த நம்பிக்கைக்கு" என்று பதில் கொடுத்து இருக்கிறார்.

இதேபோல் இன்னொரு பயனர் ஒருவர், ``வாழ்த்துக்கள் அண்ணா.. வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறோம் . . உதவி செய்யுங்கள்.. இப்படிக்கு படித்து வேலை இல்லாமல் இருக்கும் கன்னியாகுமரி இளைஞர்கள்" என்று பதிவிட, அதற்கு ``கண்டிப்பாக நண்பர்களே. நமது மாவட்டத்தில் வேலை வாய்ப்புகள் பெருக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருக்கிறார். இதேபோல் திரைத்துறையை சேர்ந்த பலரும் விஜய் வசந்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

You'r reading `எப்பவுமே தொகுதி பக்கம் தான் இருக்கப் போறேன்.. நெட்டிசனை நெகிழவைத்த விஜய் வசந்த்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இதுதான் பினராயி விஜயன்.. முதல்வர் பதவி குறித்து நச் பதில்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்