ஆட்சியை காப்பாற்ற மோடி காலில் எடப்பாடி விழுவார் - ஸ்டாலின்
டெல்லியில் மோடியை சந்திக்க சென்றிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி, ஆட்சியை காப்பாற்றுங்கள் என்று அவரின் காலில் தான் விழுவார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை ஸ்டாலின், “டெல்லி சென்றுள்ள முதலமைச்சர், எடப்பாடிக்கு மோடியை சந்திக்க நேரம் கிடைத்தாலும் கண்டிப்பாக அவர் காவிரி பிரச்சனை குறித்து பேசமாட்டார். ஏனென்றால் அவரிடம் அச்சம் இருக்கிறது. பயமும் இருக்கிறது.
என் ஆட்சியை காப்பாற்றுங்கள் என்று மோடியின் காலில் தான் விழுவார். அவருக்கான வாய்ப்பை தான் முதலமைச்சர் எடப்பாடி பயன்படுத்திக் கொள்வார். எல்லோரும் எதிர்ப்பார்க்கும் காவிரி பிரச்சனை குறித்து கண்டிப்பாக அவர் பேச மாட்டார். அதைப்பற்றி பேசும் அளவுக்கு தைரியமும், தெம்பும் அவரிடம் இல்லை” என்றார்.
மேலும், குட்கா ஊழல் குறித்து கேட்கப்பட்ட போது, “குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை டுத்து விட்டு, அதன் பின்பு ஜெயக்குமார் பேசியிருந்தால் அவருக்கு தனியாக பாராட்டு விழாவே நடத்தி இருப்பேன். திமுக ஊராட்சி ஊழியர் மீது அதிமுகவினர் பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading ஆட்சியை காப்பாற்ற மோடி காலில் எடப்பாடி விழுவார் - ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil