முடிவுக்கு வந்தது 144 தடை உத்தரவு.. தூத்துக்குடியின் தற்போதைய நிலை என்ன ?

தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மக்கள் பெரிய அளவில் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதன் பிறகும் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான நிலை ஏற்பட்டு வந்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு போராட்டத்திற்கு முந்தைய நாளான மே 21ம் தேதி அமலுக்கு வந்த நிலையில், வன்முறைக்கு பிறகு 27ம் தேதி காலை 8 மணி வரையில் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது தூத்துக்குடியில் பதற்றம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பேருந்துகள், கடைகள் செயல்படத் தொடங்கின. இதனால், 144 தடை உத்தரவை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading முடிவுக்கு வந்தது 144 தடை உத்தரவு.. தூத்துக்குடியின் தற்போதைய நிலை என்ன ? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்