துப்பாக்கி சூடு: விஜயகாந்த் தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது வருகின்றன.

அந்த வகையில், துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இங்கு, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்து முழக்கங்களும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் எனவும் கூறப்பட்டது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading துப்பாக்கி சூடு: விஜயகாந்த் தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொருட்காட்சியில் கோர விபத்து: ராட்டினம் கழன்று விழுந்தது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்