கனமழை எதிரொலி: வெள்ளப்பெருக்கால் குற்றாலம் அருவியில் குளிக்கத்தடை
மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளான தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால், நேற்று காலை முதல் இந்த பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாகி வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி போலீசார் அங்கு குளித்த தடை விதித்து அறிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading கனமழை எதிரொலி: வெள்ளப்பெருக்கால் குற்றாலம் அருவியில் குளிக்கத்தடை Originally posted on The Subeditor Tamil