வெப்பச்சலனம் எதிரொலி: சென்னையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்

சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மாலை நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தென்மேற்கு பருவமழை காரணமான தமிழகம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகம் பொருத்தவரையில், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெப்பம் அதிகரிகத்து வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னையில் நேற்று மாலை மழை பெய்தது. இதுபோல் இன்னும் மூன்று நாட்களுக்கு மாலை நேரத்தில் மழை பெய்யும் என்றும், ஆனால் இது தென்மேற்கு பருவ மழை இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You'r reading வெப்பச்சலனம் எதிரொலி: சென்னையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விநாயகர் சதுர்த்தி அன்று தனுஷுடன் மோதும் சீமராஜா..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்