மழை வெள்ளத்தில் அடித்து செல்லபட்ட சேலம் மாணவன் சடலமாக மீட்பு

சேலத்தில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சேலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடிய விடிய மழை பெய்தது. இதனால், சேலத்தில் பெரும்பாலான வீடுகள், சாலைகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்தன. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், சிக்சிப்பாளையம் நாராயண நகரில் நேற்று அதிகாலையில் மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது, சகோதரனுடன் வந்துக் கொண்டிருந்த முகமது ஆசாத் என்ற 16 வயது மாணவன் அங்கிருந்த கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்தான். அதில், அதிக அளவில் தண்ணீர் இருந்ததால் அடித்து செல்லப்பட்டான்.

இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மாணவனை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

You'r reading மழை வெள்ளத்தில் அடித்து செல்லபட்ட சேலம் மாணவன் சடலமாக மீட்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆந்திராவில் தந்தை வெறிச்செயல்: பெற்ற மகளை கோடாரியால் அடித்துக்கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்