சாலை விபத்தில் உயிரிழந்த ஷாலினியின் குடும்பத்துக்கு நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் பத்திரிக்கையாளர் ஷாலினியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்ச் நிதியுதவி அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

தொலைக்காட்சி நிருபர் சாலினி மற்றும் நண்பர்கள் திண்டுக்கல்லிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது, மதுரை திண்டுக்கல் ரோட்டில், பொட்டிகுளம் அருகே கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில், காரில் பயணம் செய்த சாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சாலினி குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

You'r reading சாலை விபத்தில் உயிரிழந்த ஷாலினியின் குடும்பத்துக்கு நிதியுதவி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஃபிபா உலகக்கோப்பையில் சிறப்புக் குடை- ட்ரோல் செய்யப்படும் புதின்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்