தா.பாண்டியனுக்கு திடீர் மூச்சுத்திணறல்: ஜி.எச்., மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, அவரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். இவருக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவரத குடும்பத்தினர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, தா.பாண்டியனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தா.பாண்டியனுக்கு ஏற்கனவே சுவாசப் பிரச்னை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கடந்த ஆண்டும் இதேபோல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தா.பாண்டியனுக்கு திடீர் மூச்சுத்திணறல்: ஜி.எச்., மருத்துவமனையில் அனுமதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - Madurai Resident Seeks Anticipatory Bail, Claims that He Was Involved in the 12 Year Old Rape Victim Assault

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்