கருணாநிதி தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்: மு.க.ஸ்டாலின்

காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகவே உள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். நேற்று இரவு கருணாநிதியின் உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தொடண்டர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனையை சூழ்ந்துக் கொண்டனர்.

இதன் பிறகு, சிறிது நேரத்தில் கருணாநிதியின் உடல்நிலை சீராகிவிட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கைவிட்டது. இதன்பிறகு, சற்று பதற்றம் தணிந்து தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், அதன் பிறகு கருணாநிதியின் உடல் நிலை குறித்து மருத்துவமனை சார்பில் எந்த அறிக்கையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, கருணாநிதியின் உடல் நிலை சீராகவே இருந்து வருகிறது. நேற்று இரவு காவேரி மருத்துவமனை அறிவித்தது போலவே சீராக உள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

You'r reading கருணாநிதி தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்: மு.க.ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திரையரங்குகளில் உணவு... தெலங்கானா அரசு எச்சரிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்