மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரம்மாண்ட இலவச கண் சிகிச்சை முகாம்

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை கோவிலம்பாக்கத்தில் பிரம்மாண்ட இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொது மக்கள் பயனடையும் வகையில் அவ்வப்போது முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் - கோவிலம்பாக்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நாளை (04.08.2018) பிரம்மாண்ட இலவச சிகிச்சை முகாம் கோவிலம்பாக்கம் பகுதியில் நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த முகாம் மதியம் 1 மணி வரை கோவிலம்பாக்கம் பகுதி எஸ்.கொளத்தூர் மெயின் ரோடு, சமுதாயக்கூடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மண்டல பொறுப்பாளர் செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.மௌரியா, நடிகையும், செயற்குழு உறுப்பினருமா ஸ்ரீபிரியா, செயற்குழு உறுப்பினர் அ.சௌரிராஜன், செயற்குழு உறுப்பினர் சி.கே.குமரவேல் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.

மக்கள் அனைவரும் கலந்துக் கொண்டு பயன்பெருமாறு கட்சியின் காஞ்சி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சோழிங்கநல்லூர் எம்.ஆர்.ராஜீவ் குமார், செயல் வீரர்களான ஏ.கே.என்.ஜெகன்செல்வராஜ், டி.எம்.சீனிவாசன், ஆர்.பாரதிராஜா, இ.லெனின் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

You'r reading மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரம்மாண்ட இலவச கண் சிகிச்சை முகாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் சதம்: அணியை தாங்கி பிடித்த கோஹ்லி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்