ரேஷன் கடைகள் நாளை இயங்குமா ? செல்லூர் ராஜூ பதில்

ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், நாளை ரேஷன் கடைகள் இயங்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 6ம் தேதி (நாளை) வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்படபோவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், நாளை போராட்டம் நடைபெறுமா என்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுயதாவது: வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ள ரேஷன் கடைகள் ஊழியர்களின் கோரிக்கைகள் பரீசிலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்.

அனைத்து பொருள்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துக் கொள்ளும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading ரேஷன் கடைகள் நாளை இயங்குமா ? செல்லூர் ராஜூ பதில் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் ஜனாதிபதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்