சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் தொடர் மழை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது.

தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக் காடானது. இதேபோல், கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகள் நிரம்பியதை அடுத்து திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. ஆனால், நேற்று மாலை ஆரம்பித்த மழை இடையில் நின்றது. அதன்பிறகு, சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

You'r reading சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் தொடர் மழை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆடி அமாவாசை... நீர்நிலைகளில் திரண்ட மக்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்