கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்ததால், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் முதற்கட்டமாக அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை எதிரொலியால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நட்வரே, நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால், நாளை ஒருநாளுக்கு பள்ளி, கல்லூரிளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

You'r reading கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல்: செக்யூரிட்டி கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்