கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவருடைய உடல்நிலை நேற்று மோசமானதை அடுத்து, சென்லையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தயாளு அம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை தேறியதும் அவர் வீடு திரும்புவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இப்படி பண்ணிட்டீங்களேம்மா...? பறிபோனது சிங்கப்பூர் வேலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்