கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பிரணாப் முகர்ஜி

கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தின் முன் அஞ்சலி செலுத்தினார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இவரது நினைவிடத்திற்கு தேசிய கட்சி தலைவர்கள் முதல் அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு சென்று அவரது படம் முன் அஞ்சலி செலுத்தினார்.

இதன்பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கருணாநிதி மறைந்த நேரத்தில் என்னால் நேரில் வரமுடியவில்லை. சிறந்த தலைவரான கருணாநிதியை நாம் இழந்து விட்டோம். 48 ஆண்டுகள் நல்ல நண்பராக இருந்தவர் என கூறினார்.

You'r reading கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பிரணாப் முகர்ஜி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேற்கு வங்காளத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேரை தேடும் பணி தீவிரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்