போலீசுக்கு சவால் விட்ட ரவுடி புல்லட் நாகராஜன் அதிரடி கைது

காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வந்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் தேனி பெரியகுளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான புல்லட் நாகராஜன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் தேனி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீசாரை விமர்சித்து வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, உலகில் எங்கு தேடினாலும் என்னை கண்டுபிடிக்க முடியாது என்று சவால்விட்டு வந்த புல்லட் நாகராஜன், இன்று தேனி பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகத்தால் விரட்டிச் சென்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நாகராஜன் பின்னர், தென்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. புல்லட் நாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading போலீசுக்கு சவால் விட்ட ரவுடி புல்லட் நாகராஜன் அதிரடி கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எடை குறைப்பு - மாயமா, மந்திரமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்