நிலக்கரி தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நிலக்கரியை விரைந்து ஒதுக்கீடு செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் நிலக்கரி இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால், ஒரு நாள் மின் உற்பத்திக்கு தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

You'r reading நிலக்கரி தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சார்லி சாப்ளினில் சான்ஸ் கிடைச்சிடுச்சி! - பாடல் வீடியோ

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்