சென்னையில் ரூ.86ஐ நெருங்கும் பெட்ரோல் விலை: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், பொது மக்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் வலுத்து வருகிறது. இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.85.15 காசுகளாக இருந்தது. இந்நிலையில் இன்று 16 காசுகள் உயர்ந்து பெட்ரோல் விலை ரூ.85.35 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், டீசல் விலையும் நேற்று ஒரு லிட்டர் ரூ.77.94 காசுகளுக்கு விற்பனையானது. இது இன்று 6 காசுகள் உயர்ந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து செஞ்சுரி அடிக்காமல் விடாது போல என்று வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

You'r reading சென்னையில் ரூ.86ஐ நெருங்கும் பெட்ரோல் விலை: அச்சத்தில் வாகன ஓட்டிகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெர்மனி மாரத்தானில் புதிய உலக சாதனை படைத்த ஒலிம்பிக் சாம்பியன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்