ஆட்சி, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது- தம்பிதுரை

ஆட்சியிலும் கட்சியிலும் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உறுதிபட தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட சீயம்பட்டி குடுமியான்மலை உள்ளிட்ட பகுதி மக்களிடம் குறைகள் அடங்கிய மனுக்களை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் பேசிய தம்பிரைதுரை, "ஆட்சி,கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. மக்களும் தொண்டர்களும் தெளிவாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசுக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்."


"பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பது போதாது. 10 ருபாய் குறைத்திருக்க வேண்டும். விலை குறைப்பை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் கையில் உள்ள விலை நிர்ணய உரிமையை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

You'r reading ஆட்சி, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது- தம்பிதுரை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்