தேனி அருகே சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரன் கைது!

Man arrested near Theni for harassing child

தேனி அருகே 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு  ஆதாரங்களை மறைப்பதற்காக தன் வீட்டிற்கே தீவைத்து விட்டு தலைமறைவான நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நாகராஜனை தேடி வந்தனர். இந்நிலையில் தன்னை போலீசார் தேடுவதையறிந்த நாகராஜ் நள்ளிரவில் தனது வீட்டு வந்து, ஆதரங்களை அழிப்பதற்காக வீட்டை கொளுத்தியுள்ளான்.

சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தோர் அவனை பிடிக்க முயன்ற நிலையில் நாகராஜ் தலைமறைவானான். இதையடுத்து அவனை தீவிரமாகத் தேடி வந்த போலீசார் பெரியகுளம் பவளம் திரையரங்கம் அருகே பதுங்கியிருந்தபோது கைது செய்தனர்.

You'r reading தேனி அருகே சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரன் கைது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமைச்சர் மீது மீ டூ புகார்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்