கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார் மு.க.ஸ்டாலின்

MK Stalin sent relief supplies to the affected areas of Gaja storm

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டள்ளது. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் உதவி வருகின்றனர்.

அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். அப்போது, உடன் கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் தியாநிதி மாறன், மாவட்டக் கழக செயலாளர் அன்பழகன், எம்.கே.மோகன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

You'r reading கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார் மு.க.ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிவாரண பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்