கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

Puducherry announces holiday for schools due to heavy rain

கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் எதிரொலியால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இது தொடர்ந்து வலுடைந்து வருவதால், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை; புயலுக்கு வாய்ப்பு? சென்னை வானிலை ஆய்வு மையம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்