நாகை கஜா நிவாரண முகாம் அருகே சாலை விபத்து- 4 பெண்கள் பரிதாப பலி

Four women killed in Nagai

நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் தங்கியிருந்த நிவாரண முகாம் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் 4 பெண்கள் பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டது நாகை மாவட்டம். இம்மாவட்டத்தின் நீர்முலை நிவாரண முகாமில் ஏராளமான மக்கள் தங்கியுள்ளனர்.

இம்முகாமில் இருந்தவர்கள் சாலையை கடக்க முயன்றபோது மினிவேன் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் பலியாகினர். மணிகண்டன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் திருத்துறைப்பூண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading நாகை கஜா நிவாரண முகாம் அருகே சாலை விபத்து- 4 பெண்கள் பரிதாப பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொன். ராதாகிருஷ்ணனுக்கு அவமரியாதை.. குமரியில் இன்று பாஜக ‘பந்த்’- கடைகள் மூடல்- பஸ்கள் மீது கல்வீச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்