கஜா புயல் பாதிப்பு- நெடுவாசல் விவசாயி திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை

Gaja: Farmer ends life over crop loss

கஜா புயலால் தென்னந்தோப்புகள் முற்றிலும் அழிந்து போன விரக்தியில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கஜா புயல் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதரத்தை சூறையாடிவிட்டது. பல லட்சக்கணக்கான தென்னை மரங்கள், சவுக்கு, முந்திரி, பலா மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன.

கடந்த 10 நாட்களாக மின்சாரம் இல்லாமல் முகாம்களில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த கஜா புயலால் பல ஏக்கர் தென்னந்தோப்பை பறிகொடுத்த புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த திருச்செல்வம் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த திருச்செல்வம் உடலுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

You'r reading கஜா புயல் பாதிப்பு- நெடுவாசல் விவசாயி திருச்செல்வம் விஷம் குடித்து தற்கொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சரணாகதி அடைந்தும் கூட்டணிக்காக மோடியிடம் இருந்து சிக்னல் வரலையே... கலக்கத்தில் எடப்பாடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்