உரிமம் பெறாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி

2 years jail for accommodation without license District collector action

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் கண்டுப்பிடித்ததை அடுத்து, பெண்கள் விடுதி உரிமையாளர்களுக்கு கடும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சிறுவர்கள், ஆதரவற்றோர், பெண்களுக்கு என விடுதிகள் தமிழக அரசு மற்றும் தனியார்களால் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள், முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பல தனியார் விடுதிகள் அரசு அனுமதியின்றியும் இயங்கி வருகின்றன.

தொடர்ந்து, பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தி போலீசாரிடம் சிக்கிய விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் பெண்கள் விடுதி நடத்துபவர்களக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில், பதிவு பெற்ற விடுதிகளின் பெயர் பட்டியல், விடுதிகளின் முகவரியோடு டிசம்பர் 31ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

You'r reading உரிமம் பெறாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னது இதுதான் ஃபர்ஸ்ட் லுக்கா? ஃபேன் மேடே நல்லா இருக்கும் போல!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்