இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை: சென்னையில் அறிமுகம்

Online Diesel sales for the first time in India Introduced in Chennai

நாட்டிலேயே முதன்முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில், ஆன்லைன் விற்பனை வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. குண்டு ஊசி முதல் ஐபோன் வரை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளாம்.

அந்த வகையில், இந்தியாவிலேயே முதல்முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை மையத்தில் இன்று மாலை முதல் ஆன்லைனில் டீசல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக, ரீபோஸ் ஆப் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் டீசல் ஆர்டர் செய்யலாம். டீசலை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படுகிறது. இதற்காக கூடுதல் கட்டணமோ, டெலிவரி கட்டணமோ இல்லை.

ஆன்லைன் விற்பனையின் முதற்கட்டமாக ஒரு நாளுக்கு ஒவ்வொரு நபருக்கும் தலா 200 லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும் என்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

You'r reading இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை: சென்னையில் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்: வருவாய் துறையினர் அதிரடி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்