சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

Sahitya Akademi award winning writer Prabanjan passed away

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் (வயது 73) இன்று காலமானார்.

புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் சென்னையில் பல ஆண்டுகாலம் வசித்து வந்தார். பின்னர் புதுவைக்கு இடம்பெயர்ந்தார்.

100-க்கும் மேற்பட்ட நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகளை எழுதியுள்ள பிரபஞ்சன் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபஞ்சன், புதுவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பிரபஞ்சன் காலமானார்.

பிரபஞ்சன் மறைவு தமிழ் இலக்கிய உலகத்துக்கு மிகப் பெரும் பேரிழப்பு!

You'r reading சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எய்ம்ஸ்-க்கு ஜெ. பெயர்? அமைச்சர் உதயகுமாருக்கு 'நோ' சொன்ன சுகாதார செயலர் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்