சீனாவில் கொலைவெறி தாக்குதல்... 4 பேர் உயிரிழப்பு

கொலைவெறி தாக்குதல்... 4 பேர் உயிரிழப்பு

சீனாவில் முதியவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் அப்பாவி மக்கள் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனா ஹூனான் மாகாணத்தில் உள்ள ஜிக்ஸிங் நகரைச் சேர்ந்தவர் 53 வயது முதியவர் ஒருவர், அவரது வீட்டில் இருந்தபோது திடீரென கத்தியை எடுத்துக் கொண்டு கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டார். இதில், பலத்த காயமடைந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவரை கைது செய்தனர். சீனாவில், விரக்தியடையும் நபர்கள் சிலர் திடீரென கொலை வெறி தாக்குதலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் சீனாவில் நடந்த இரண்டாவது கொலைவெறி தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

இதேபோல், கடந்த 11-ஆம் தேதி சீனாவின் தலைநகரான பீஜிங் நகரில் 35 வயது இளைஞர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading சீனாவில் கொலைவெறி தாக்குதல்... 4 பேர் உயிரிழப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என்னது..? மதுபானங்கள் டோர் டெலிவரியா.. ஹிப்பார் செயலியுடன் டாஸ்மாக் கைகோர்ப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்