ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: ஹெலிகாப்டர் விழுந்து 12 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள பால்க் மாகாணத்தில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உக்ரேனிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவன ஊழியர்கள் உள்பட 14 பேர் பயணம் செய்தனர்.

அப்போது, பால்க் பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கு ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You'r reading ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: ஹெலிகாப்டர் விழுந்து 12 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாணவர்களுக்கு சுய கட்டுப்பாடும் ஒழுக்கமும் வேண்டும் - விஜயதரணி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்