8 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது

8 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy

தமிழக மீனவர்கள் எட்டுப் பேர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெடுந்தீவுக்கு அப்பால், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே, இலங்கைக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட, நான்கு மீனவர்கள், காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றொரு படகுடன் கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்கள் நேற்று காரைநகர் கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இரண்டு படகுகளையும், எட்டு மீனவர்களையும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

You'r reading 8 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொங்கல் பரிசு... ஸ்மார்ட் கார்டு இருக்கா.. பிடிச்சுக்கோ ஆயிரம்... அமைச்சர் உதயக்குமாரின் ஸ்டைலே தனிதான் !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்