தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு! வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு! 20-11-2020
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.
தொடர் விடுமுறைகளின் காரணமாகத் தங்கத்தின் விலையில் பெரிய அளவு மாற்றம் ஏதும் இல்லை. மேலும் பொருளாதார மந்த நிலை உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதன் தொடர்ச்சியாகத் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4740 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5 உயர்ந்து, கிராமானது ரூ 4745க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் - 4745
8 கிராம் ( 1 சவரன் ) - 37960
தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5120க்கு விற்பனையானது. தூய தங்கத்தின் விலையானது இன்று கிராமிற்கு ரூ.5 உயர்ந்து, கிராமானது 5125க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5125
8 கிராம் - 41000
வெள்ளியின் விலை
தங்கத்தின் விலை உயரும்போது, வெள்ளியின் விலை குறையத் தொடங்கும். ஆனால் இன்று கிராம் நேற்றைய விலையில் ரூ.50 பைசா உயர்ந்து, கிராமானது 66.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66500க்கு விற்பனையாகிறது.
You'r reading தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு! வெள்ளி கிலோ ரூ.500 உயர்வு! 20-11-2020 Originally posted on The Subeditor Tamil
More Business News